“எதார்த்த வாழ்கையின்மீது அவன் எண்ணோட்டத்தை ஊடினைத்ததில்லை. எவருடைய இறப்பும் அவன் மனதை பாதித்ததில்லை. எதிர்காலத்தைப் பற்றியோ, இறந்தகாலத்தைப் பற்றியோ சிந்தித்ததில்லை. அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக்கொள்வான். அவன் மற்றவர்கள் மீது ஆழ்ந்த அன்போ, கடுமையான வெறுப்போ கிடையாது. எவர்மீது நம்பிக்கை இல்லை. அவன் வாழ்கையை எந்த ஒரு இடத்திலும் சுயபரிசோதனை செய்ததில்லை. செய்யத் தோன்றியதுமில்லை. ஏன்னிந்த தனிமையென்று அவன் யோசித்ததில்லை. தினமொரு காதலும், தினமொரு காதலியும், தினம் மாறும் மேகங்கள் போல. இந்தப் பத்தியை எழுதும் வரை, “ நான் ஏன் இப்படி?”யென்று அவனை அவன் கேட்டதில்லை. இப்போது தான்……..”
No comments:
Post a Comment