Monday 12 May 2014

மூன்றாம் துருவம்



                                    அந்த ரயில் பெட்டியில் சில இருக்கைகள் தவிர அணைத்திலும் ஆட்கள் அமர்ந்திருந்தனர்.  ஜன்னல் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி
மாமா அரவாணி வந்துருக்கேன்காசு குடு
                   ஏ போ அங்கிட்டு சனியன்
ஏன் மாமா கொச்சிக்கிற?”
                  இந்தா பத்து போய் தொல
                  சரி வரேன் மாமா
பத்தை வாங்கி மார்பு சட்டைக்குள் புதைத்துக் கொண்டாள். அருகில் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியும் அவள் மகனும் அமர்ந்திருந்தனர்.  அவர்களை பார்த்து
                 அரவாணி வந்துருக்கேன் காசு குடு
அவள் கேட்பதை பார்த்து பயந்துப் போன பெண்மணி, பையில் இருந்து இரண்டு பத்துரூபாய்நோட்டுகளை கொடுத்து விட்டு ஜன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டாள். பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து  சென்றுவிட்டாள். அவளை மற்ற  பயணிகள் வினோத்ததை பார்ப்பது போல் வேடிக்கை பார்த்தனர். அதை அவள் கவனிக்கவில்லை.
                   மாமா அரவாணி வந்துருக்கேன் காசு குடு
காசு தரேன்ஆனா மாமாவுக்காக ஒரு டான்ஸ் ஆடனும்
                    போ மாமா காசு குடு
அவள் கையை பிடித்துத்திருகினான்.
 “விடுநீ காசு குடு”  என்று கையை உதறினாள்.
சட்டையில் இருந்து ஐந்துரூபாய்யை கொடுத்தான்.
அந்த பெட்டியின் வாசலில் நின்றுக் கொண்டிருந்த இருபதுவயது மதிக்கத்தக்க இளைஞன், அங்கு நடப்பதையே கவனித்துக்கொண்டிருந்தான். அவனை கடக்கும் போது, அவளை வழி மறித்தான்.
என்ன மாமாகாசு குடு
இளைஞன் அவள் கையை பிடித்துஆள் நடமாட்டம் இல்லாத கழிப்பறை பக்கம் இழுத்து சென்றான்.
ஏன் இப்படி அசிங்கமா நடந்துக்குறிங்கஉங்களுக்கு என் அக்கா வயசுதான் இருக்கும். உங்கள என் அக்காவா நனச்சு சொல்றேன். இனிமே பிச்சை எடுக்காதிங்க அக்கா
சிரித்தாள்.
                       அப்ப சாப்பாட்டுக்கு தம்பி
                      “உடம்ப வச்சு உழைச்சு சாப்புடுங்க
உடம்ப வித்து சாப்புட சொல்றியா?”
பிச்சை எடுக்குறதையும், இதையும் தவர வேற எதாவது வேல பாருங்க. நான் கடை தெருல தான் இருக்கேன்.அங்க எத்தனகட இருக்கு அங்க வேல தேடிருக்கிங்களா? இல்ல வேற எங்கயாவது தான் போய் வேல தேடிருக்கிங்களா?”
இல்ல தம்பிஎன்று வெட்கி த லைகுனிந்தாள்.
                       வேல தேடிப்பாருங்க. கெடைக்கலனா மறுபடியும் பிச்சை எடுங்க. நானும் காசு தரேன்
அவள் எதுவும் பேசாமல் அல்லது பேச முடியாமல் அங்கு இருந்து சென்றுவிட்டாள்.
மறுநாள் காலை கடைதெருவிற்க்கு சென்றாள். ஒரு ஜவுளி கடை கண்ணில் பட்டது.  அதற்குள் நுழைந்தாள். அவளை பார்த்தவுடன் அங்கு நின்றிருந்தவன் அவளை நோக்கி வேகமாக வந்தான்.
                        ஏ நீ எதுக்கு இங்க வந்த யாருயா இதை யெல்லாம் உள்ள விட்டது
                      சார் ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க சார்
காலைல கஸ்டமர் வர நேரத்துல நீ வந்து தொலச்சுருக்க.  இன்னும் மொத போனியே ஆகலஅப்புறம் வா காசு போடுறேன்
சார் நா காசு கேக்கல சார்இங்க ஏதாவது வேல இருந்தா குடுங்க சார்
என்னது வேலையாஇது ஜவுளிகடை. இங்க உனக்கு என்ன வேல குடுக்குறது?  அந்த மாறி எடத்துல தான் உன்ன சேப்பாங்க.  இந்தா பத்து மொத எடத்த காளிப் பன்னு” 
காசு வேணா சார்வேல தான் வேணும்” 
வேல எல்லாம் உனக்கு கடையாது போ போ                           
அடுத்ததாக ஒரு குடவுனுக்குள் நுழைந்தாள்.  யாரும் இல்லை.  கடைசியாக ஒரு அறையில் ஒருவன் இருந்தான்.  அறைக்குள் நுழைந்தாள்
                     சார் எதாவது வேல வேணும்” 
அவன் எழுந்து அவள் அருகில் வந்தான்
என்னது?”
                   வேல வேணும் சார்
அவன் அவள் கன்னத்தை கிள்ளினான்.  அவள் தட்டி விட்டாள்
                    பார்ரா
அவள் இடையை கையால் பற்றி பிசைந்தான்.
                     ச்சீ விடு சனியனே
கதவைபடார்என சாத்திவிட்டு கோவமாக வெளியேறினாள்.
அடுத்ததாக ஒரு ஹோட்டலில் நுழைந்தாள். கல்லாபெட்டியை நோக்கி நடந்தாள். அங்கு ஒரு குடும்பம் நின்றுக்கொண்டிருந்தது. அவர்கள் அருகில் போய் நின்றாள். அவளின் உயரமான உருவத்தையே பார்த்தார் போல் குழந்தை இருந்தது.  அப்போது அதன் தந்தை,
நீ குழந்தைய கூட்டிட்டு போதம்பி அங்க பாக்கக்கூடாது போ. வேகமா போ
ஏ போ அப்புறம் வாஇங்க நிக்காத கிளம்புஎன்றான் கல்லாப்பெட்டிக்காரன்.
ஐயா இங்க எதாவது வேல இருந்தா குடுங்கையாபாத்திரம் கலுவுறது,  கூட்டு தள்ளுறது இந்த மாதிரி எதுவா இருந்தாலும் குடுங்கையா. நா செய்வேன்
உனக்கு எல்லாம் வேல தர முடியாது.யோவ் இத பிடிச்சு வெளில போடுங்கய்யா
அவளை தள்ளி தெருவில் போட்டனர்.
தெருவில் போடப்பட்டவளை தூக்கிவிட்டான் ரயிலில் பார்த்த அந்த இளைஞன்.
                               சாரிக்கா நான் சொன்னத கேட்டனால தான் இவ்வளவு அவுமானம் உங்களுக்கு
அதுக்காக மறுபடியும் பிச்சை எடுக்கசொல்றியாஇத்தன நாளு நான் தான் கேவளமானவள்னு நனச்சேன்.  இப்பதான் தெரியிது என்ன விட கேவளமானவுங்கல்லாம் என்ன சுத்திதான் இருக்காங்கனு நா போனாலே பிச்சை எடுக்க வந்துருக்கேன்னு தொறத்துராங்ககண்ட எடத்துல கைய வச்சு தடவுறானுங்க,  பிசையுறானுங்க. ச்சீ அந்த தேவுடியா நாயு.  கருமம்பிச்சை எடுக்குறதையும், படுக்குறதையும் தவர எனக்கு எதுவுமே தெரியாதுனு அவுங்களே முடிவு பன்னிக்கிறாங்க. குழந்தைகள் என்ன பாக்ககூடாதாம். நா என்ன அழுகின பிணமா? இத்தனை நாள் இந்த கேடு கெட்ட மனுசனுங்க கிட்டயா பிச்சை எடுத்தோம்னு நனைக்கும் போது உடம்பு கூசுது. என்ன மனுசியா கூட மதிக்காம ஆடு மாடு மாதிரி அது, இதுனு கூப்புற்ற இந்த நாயிக மத்தில நா கேவளமான ஜென்மமா படுறேன் இந்த சமுதாயத்துக்கு. இனி இந்த எளவெடுத்த நாயிக முன்னாடி நான் கெளரவமா வாழ்ந்துகாட்டுறேன். எனக்கு தம்பினு ஒரு சொந்தம் நீ கடச்சியே அது போதும் தம்பிநா வரேன். ஆனா ஒரு நாள் நீ என்ன நனச்சு பெருமபடுவ தம்பி
அவள் சென்றாள். அவன் தலை குனிந்து நின்றான், இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தின் அருவருக்கத்தக்க செயலுக்காக.



                                                    இந்த சமுதாயம் சில இடங்களில் தூய்மையாக தெரிந்தாலும் , பல இடங்களில் மிகவும் அருவருப்பான சாக்கடையாகதான் இருந்தது,  இருக்கிறது. பெரும்பகுதியினர் அந்த சாக்கடையில் தான் மிதக்கின்றனர்அவர்கள் அதை தான் தூய்மை என்று மிதப்பில் இருக்கின்றனர். மேலும் அவர்களுடன் சேராத அல்லது அவர்களால் ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது உண்மையில் தூய்மையாக இருப்பவர்களை அருவருப்பான சாக்கடையாக பார்க்கின்றனர். ஆனால் தூய்மையானவர்கள் அவற்றை பற்றி கவலைபடுவது இல்லை எப்போது தூய்மையாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள்


Sunday 11 May 2014

ஏ பொண்ணே


                                    பொண்ணே
பொண்ணே,
என்ன  ஒரு
குழந்தைதனமான  கொலை
புனிதமான  பூகம்பம்
இனிமையான  இடி
கலைநயமான  கலவரம்
நீ  என்னை  கடந்துபோகும்   பொழுது……..

 பொண்ணே,
என்னிடம்
பூந்தொட்டிகளே   இல்லை
ஆனால்  இத்தணை  புதிய  பூக்கள்
மீன்தொட்டிகளே  இல்லை
ஆனால்  இத்தனை  வண்ணமீன்கள்
மழைமேகங்களே   இல்லை
ஆனால்  இத்தணை  குளிர் சாரல்
நீ  என்  தோள்  சாயும்  பொழுது………..

பொண்ணே,
குடித்தேன்
முதல்  மழைதுளியை
திகட்டாத  தேனை
மனம்வீசும்  மதுவை
உன்   இதழ்  நனைக்கும்  பொழுது………..

பொண்ணே,
என்னுள்  எத்தணை 
கற்பழிப்புகள்
கீறல்கள்
கதறல்கள்
காயங்கள்
உன்  கோவத்தால்……….

பொண்ணே,
என்னை  சுற்றி
எத்தணை
பாலைவனங்கள்
மயாணங்கள்
பற்றிஎரியும்  மரங்கள்
கரையில்லா  தீவுகள்
உன்  பிரிவில்……

பொண்ணே,
நான்  வைத்திருக்கிறேன்
சாம்பலான  சூரியன்
அழுகிய  நிலா
கருகிய  இரவு
ஓய்வுபெற்ற  மூச்சு
ஊசிப்போன  இதயம்
உன்  நினைவாக……..

 பொண்ணே
இந்த  எல்லாவற்றுக்கும்  பெயர்  தான்
என்ன  பொண்ணே????????............
                            -   அரவிந்ராஜ் ரமேஷ்






Wednesday 7 May 2014

என் ராஜா


                                   என்  ராஜா
ழையிரவு,
உறைய வைக்கும் குளிர்,
தூரத்தில் மங்கிய மின்விளக்கு,
ஜென்னல் அருகே சாரல்,
போர்வைக்குள் நான்,
காதருகே  ராஜா ……………

ணமாகாமலேயே
படுக்கையில் சுகம் அனுபவிக்கின்றேன்,
இசைவாங்கி வழியாக
 ராஜாவிடம் இருந்து…………

விட்டுப்போன அவள்
எப்படி
என்னிடம் வந்தாள்?
என் தோள் சாய்ந்தாள்??
என்னிடம் பேசினாள்???
என்னிடம் சின்ன சண்டையிட்டாள்????
ஆஹா அழைத்து வந்தது
 நீ  தானே  
ராஜா…………

நானா??
மழையில் நனைந்துக்கொண்டுடிருக்கிறேன்,
அட என் மேல் ஈரம் இல்லை?
மன்னிக்கவும்
ஆகாயத்தில் உலாகிக்கொண்டிருக்கிறேன்,
அட என் கால்கள் தரையில் உள்ளன?
மன்னிக்கவும்
இரண்டையுமே செய்து கொண்டிருக்கிறேன்,
எப்படியா?
பாடிக்கொண்டிருப்பது ராஜாவாச்சே…………….

லோ ராஜா
நீ ஒன்றும் இசைக் கடவுள் இல்லை.
ஏன்??
நீதான் எப்பொழுதும் எங்களுடனே
இருக்கிறாய்,
பேசுகிறாய்,
சிலரை நினைவூட்டுகிறாய்,
உணரவைக்கிறாய்,
அழுகவைக்கிறாய்,
அரவணைக்கிறாய்,
பின்பு எப்படி இல்லாத ஒன்றாக
உன்னை கருதமுடியும்…….

தைவிடு  இப்போது எனக்காக
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
படலை பாடப்போகிறாயா இல்லையா??

-       அரவிந்ராஜ் ரமேஷ்











Sunday 4 May 2014

என்னத்த சொல்றது?

                   என்னத்த சொல்றது?
              
             என்னத்த சொல்றது? எல்லாத்தையும் நனச்சாலே நெஞ்சு கனக்குது. அந்த கொத்தன் தெரு எங்க ஐயா,  அதாண்டா உங்க தாத்தா வீடு இருந்த தெரு.  சொந்த வீடு. விசாலம இருக்கும். சும்மாவா ஆறு பொம்பள பிள்ளைகள் பெத்தா வேணாமா? ஆனா ஒன்னு எல்லா பிள்ளைகளையும் ஒரு கொறையும் இல்லாம உங்க தாத்தா வளத்தார். உங்க அம்மாச்சி  அதாண்டா என்ன பெத்தவ எல்லா பிள்ளைகளையும் ஒன்னா தான் பாத்தா. எங்க ஐயாவோட நாங்க பத்திரகாளி கோயிலுக்கு போறத ஊரே கண்கொட்டாம பாக்கும். எல்லா கொழுந்தைகளையும் சீரிசிங்காரிச்சு கைய புடிச்சு நடத்தியே கூட்டிப் போகும் உங்க அம்மாச்சி.  எங்க எல்லாருக்கும் ஐயா மேல அம்புட்டு பயம். அதவிட மரியாத நறையா. நான் மூத்தவங்றனால பத்தாவதோட படிப்ப நிப்அம்மாச்சிடு வீட்டுல ஒத்தாசைய இருந்தேன். அப்டியே ரெண்டு வருசம் ஓடிடுச்சு. என்னத்த சொல்றது? அப்பதான் வந்தாரு சிவ ராமகிருஷ்ணன். சிவகாமி அத்தையோட தூரத்து சொந்தம். அதாண்ட புதுத்தெருவுல ஒரு கூனு அம்மாச்சி இருக்கே. வட நாட்டுல ஏதோ இன்ஜினியருக்கு படிச்சவரு. பாக்க கொலு கொலுனு இருப்பாரு. அவர கண்டாலே எங்க தெரு பொண்ணுங்களுக்கு ஒரு பித்து. எனக்கும் தான். ஆன அவரு என்ன ஏற்றெடுத்து கூட பாக்க மாட்டாரு.  என்னத்த சொல்றது?  அன்னைக்கு ஒரு நாள் என் தோழி கெளரியோட சேந்து அவரு கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். ஹஹம்ம்ம்….. கெளரி  இப்ப எங்க இருக்காலோ? யாரு கண்டா?  அந்த நேரம் பாத்து எங்க ஐயா அத பாத்துட்டாரு.  காத பிடிச்சு தரதரனு இலுத்துட்டு வந்து வீட்டுல போட்டு அடி வெளுத்துட்டாரு. “மூத்தத வீட்டுல போட்டது எவ்வளவு பெரிய தப்புனு இப்பதான் தெரியுதுனு எங்க அம்மாவ  ஏசுஏசுனு ஏசுனார்.  ராமு மாமாட்ட சொல்லி அவசர அவசரமா கல்யாணத்துக்கு பேசி முடிச்சிட்டாரு எங்க ஐயா.  ஒரு மாசம் என்ன வீட்டுலயே அடச்சு போட்டுட்டாரு. அது அந்த வயசுல வந்த ஒரு சின்ன சலனமே தவர வேற ஒன்னுமில்ல. கல்யாணத்தன்னக்கி தான் உங்க  அப்பா மொகத்தையே பாத்தேன். அன்னைக்கி ராத்திரியே ஒன்னுவிடாம சொல்லி  அவரு கால்ல சாஷ்டாங்கம்மா விழுந்துட்டேன். அவரு கோவப்படல மூஞ்ஜிக்கூட கோணல. என் கண்ணீர தொடச்சு ஒரு தெய்வீக பார்வ பாத்தாரு பாரு. அந்த பார்வயே எனக்கு சொல்லிக்குடுத்துருச்சு அவரு தான் என் தெய்வம்னு. என்னத்த சொல்றது?  ஒரு நாள் ஒரு பொழுது ஒரு வார்த்த ஒரு வார்த்த அத பத்தி அவரு பேசுனது இல்ல. கல்யாணமாகி இந்த இருவது வருஷமா என் மூஞ்ஜி கோணுற மாதிரி  அவரு நடந்தது கிடயாது. வீட்டுல சாப்பாடு கூட என் விருப்பப்படியே வச்சுக்க சொல்லுவாரு. என்ன கேட்டாலும் சிரிச்ச மொகத்தாட வாங்கி தருவாரு. பொக, தண்ணீனு எந்த கருமமும் கிடயாது. எனக்கு உடம்பு முடியலனா அந்த மனுசனுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. பக்கத்துலையே உக்காந்து என்ன கவனிச்சுப்பாரு. தெய்வம்ன சும்மாவா? உன்ன பெத்து அவரு கைல கொடுக்கும் போது. அவரு கண்ணுல நா பாத்த ஆனந்தம் இருக்கே. அப்பவே அவரு கால்ல சரணாகதி ஆய்டலாம்னு தோணுச்சு. என்னத்த சொல்றது? ஒரு நாள் கூட அவரு என்ன கண்கலங்க விட்ட்து இல்ல. இப்ப என்ன இப்பிடி கதறவிட்டு ஆஸ்பத்திரி படுக்கைல பேசுமூச்சு இல்லாம படுத்துகடக்கார். இவர ஏத்துன அந்த லாரிகார நாயி கட்டைல தான் போவான். நாசமாத்தான் போவான்.  இவருக்கு ஒன்னும் ஆகாது. பத்திரகாளி காப்பாத்துவ எத்தன நாள் அவள கும்புட நடயா நடந்துருக்கேன். இல்லன அவளுக்கு இருக்கு. நீ ஒன்னும் கவலபடாத அப்பாவுக்கு ஒன்னுமில்ல