Friday 27 June 2014

சூதுயியல்


                  “வணக்கம்சார்” என்று கைக்கூப்பிய வாரே குளிரூட்டப்பட்ட கல்லூரி முதல்வர் அறைக்குள்ளே நுழைந்தார்.
தேய்காத வெள்ளை சட்டையும் வேட்டியும், கலுத்தில் துண்டும் அவர் கிராமத்துவாசி என்று கூறியது.
                  “வாங்க வாங்க ஏன் நிக்கிரீங்க. உக்காருங்க”
                  “இருக்கட்டும் சார்”
                  “அட உக்காருகனு சொல்றேன்ல”
 தன் மகனை இருக்கைக்கு அருகில் நிற்க வைத்துவிட்டு தயக்கத்துடன் நெழிந்தவாரே அமர்ந்தார்.
“சொல்லுங்க என்ன விசயம்? பையன காலேஜ்ல சேக்கனுமா?”
“ஆமா சார். எங்க அத்தாச்சி மவே இங்க தான் படிச்சான். இப்ப எங்கயோ வேல பாக்குறான். அதான் இவனையும் இங்க சேக்கலாம்னு வந்தேன். பையன் நல்லா படிப்பான். இப்ப பண்ணண்டாப்பு பரிச்சைல கூட நறையாமார்க்கு வாங்கிர்கான். இங்கயும் நல்லா படிப்பான். நீங்க இங்க சேத்துக்கனும்”
                 “தம்பி எத்தண மார்க் நீ”
                 “அஅ……..   அறனூத்திபத்து”
                “அறனூத்திபத்துத்தா??                                    "சரி ஒன்னும் பிரச்சன இல்ல சேத்துக்கலாம். உனக்கு என்ன டிப்பாட்மண்டு தம்பி வேணும்?”
“எங்களுக்கு அத பத்தி எல்லாம் என்ன சார் தெரியபோகுது?நீங்களே நல்லதா பாத்து சொல்லுங்க சார்.இவன் படிப்பான்”
“இப்ப ஐ.டில தான் சீட்டு காலியா இருக்கு. நீ ஐ.டியே உனக்கு தாறேன். ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்க எந்த ஊரு?”
                 “ஸ்ரீவில்லிப்புத்தூர் கிட்ட வத்திராய்ப்பு கிராமோ சார்”
“அப்ப தினனோ வந்து போக முடியாது. நீங்க ஹஸ்டல்ல சேர்ந்துக் கோங்க. முன் பணம் கட்டகாசு கொண்டு வந்திங்களா?”
“இருக்கு சார். போனபோகம் நல்ல வெளச்சல் வேர இவனுக்காண்டி காசுவேர சேத்து வச்சிருந்தேன்”
                 “டொனேஷன் மூனுருவா வருச பீசு எழுவதாயிரம் வரும் ஹாஸ்டலுக்கு அறுவது வரும், ஸ்டோர் பீஸ், வேல்யு ஆடட் கோர்ஸ், எக்ஸாம் பீஸ் டெபாசிடுனு மொத வருசம் மூனு எழுவது கட்டுனா போதும். அப்புறம் வருசம் வருசம் ஒன்னு எழுவதுகட்டுணா போது”
“அதெல்லாம் கட்டிர்வேன் சார். ஊர்ல வீடு காடெல்லாம் கடக்கு, அத வித்தா போகுது. படிச்சு முடிச்சப்பறம் இவனுக்கு நல்ல வேல கெடச்சா போதும் சார்?”
               “அந்த கவலை உங்களுக்கு வேணா .உங்க பையன நல்ல வேலைல சேத்துருவோம். உங்க பையன் எதிகாலத்துக்கு நாங்க உதிரவாதம்.”
              “அது போதும் சார்”
              “நீங்க வெளில வெய்டிங் ஹால்ல உக்காந்திருங்க. இப்பதைக்கு எவ்வளோ கட்டணும்னு எழுதி தருவாங்க”
“ரொம்ப நன்றி சார். நாங்க வறோம்”
காத்திருப்பவர்கள் அறை மிகவும் பரபரப்பாக இருந்தது. எதிரில் உள்ள கட்டணம் சொலுத்தும் வரிசை நீலமாக இருந்தது. இருவரும் அங்கு போடப்பட்டிருந்த இரும்புநாற்காளியில் அமர்ந்தனர்.
“ஏன்டா மவனே பெரிய காலேஜா இருக்கும் போலயேடா?” என்று கூறிய வாரே எல்லாவற்றையும் வியப்புடன் பார்த்தார். அவர் மனதில் சந்தோஷமும், பெருமையும் மொய்க்கத் தொடங்கியது.
“கிழக்கால கடக்குற நம்ம காட்ட வித்துருவோம். நறையா செலவாகும்னு சொல்றாங்கள்ள. எதுக்கும் காசு கைல வச்சிருப்போம். நீ மட்டும் நல்ல படிச்சுக்கராசா”

நான்கு வருடங்களுக்கு பிறகு,

இருவரும் அதே காத்திருப்பவர்கள் அறையில் அமர்ந்திருந்தனர். இரும்பு நாற்காளிகள் பஞ்சுநாற்காளிகளாக மாறியிருந்தது. மின்விசிரிகள் பறந்து குளிர்சாதணங்கள் குடிக்கொண்டிருந்தது. ஆனால் அதே பரபரப்பும், நீலமான கட்டணம் செலுத்தும் வரிசையும் மாறாமல் இருந்தது.
“ராசா இவங்க தர இந்த செர்டிபிகெட்ட வாங்கிட்டு நீ மெட்சாஸ் போயி நம்ம பாண்டியன் கூட சேந்துக்க ராசா. அவன் எதாவது வேல இருந்தா வாங்கித் தருவான். எந்த வேல கெடச்சாலும் சேந்துக்க ராசா. நாங்க ஐயா நெலத்துல வேல பாத்துக் கஞ்சிக் குடுச்சிக்கிறோம்.”


’……..மெல்லச்சாகும்’

”செல்லம் யாராவது உன்னோட
பெயர் என்னனு கேட்டா,
‘மை நேம் ஸ்……..’னு
சொல்லனும் சரியா?”

“குட் மார்னிங் மம்மி”

”உன்னோட பிள்ளைய
இங்கிலீஷ் மிடியத்துல படிக்கவை,
அப்ப தான் உருப்புடும்”

“அப்பா நா பி.ஏ தமிழ் படிக்கப்போறேன்”
“அத படிச்சு வேல கெடக்காம
தெருதெருவா அலயப்போறியா?”

”ஏன்டா இஞ்னியரிங் படிக்கிற
பேங்க்ல தமிழ்லயா லெட்டர்
எழுதுவ? உன்னெல்லாம்
படிக்கவச்சு என்ன பிரயோசனம்”

”ஐ லவ் யூ டி”

“ரெண்டு நிமிஷம் இங்கிலீஷ்ல
பேசுறதுக்கே மூச்சு வாங்குது உனக்கு,
வெள்ளக்காரன் எப்புடி திக்காம
இங்கிலிஷ் பேசுறான் பார்”

“உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக
மாற வேண்டுமா? இன்றே சேருவீர்
Success Spoken English Centre

”தெனோ ஹிந்து பேப்பர் படி
அப்ப தான் கொஞ்சமாவது
மூள வளரும்”

“பிரபல பல்கலைகழகத்தில்
தமிழ் மொழி ஆய்வகத்தை
மூட முடிவு”

நாங்க  *****டிவில இருந்து வறோம்
உங்களுக்கு பிடிச்ச தமிழ்எழுத்தாளர்
யார் “
“ம்ம்ம்ம்…………   பாரதியார்”

பத்திரிக்கை செய்தி (கடைசி பக்கம்):
தமிழ்மொழி குறித்து சிறப்புகட்டுரைகள்
அடங்கிய நூல்கள் அறிமுகம் செய்யும்
நிகழ்ச்சி தமிழறிங்கர்களால் நேற்று நடத்தப்பட்டது.
பத்துக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள்
இதில் கலந்துக்கொண்டனர்.

பத்திரிக்கை செய்தி (முதல்பக்கம்) :
பல்கலைக்கழகத்தில் மீண்டும்
தமிழ்ஆய்வகத்தை துடங்காவிட்டால்,
தமிழ் பற்று நிறைந்த தமிழ்நாட்டு மக்களை
ஓன்றுத்திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக 
பிரபல அரசியல்வியாதி சூளுரை.


Sunday 1 June 2014

இரண்டுகால் ஜந்து

             

நெற்றியில் குறிகளிட்டு கோயில் கொண்டாட்டங்களில் குவியென்றனர்,
பெருமாள்முன் அணைவரும் ஒன்றெயென்றனர்,
இல்லாதவன் இலவசதரிசனத்தில் நிற்க,
இருக்கிறவர்கள் மட்டும் இருநூறுரூபாயில்
கொல்லைப்புறம் புகுந்தனர்,   
கோயில் பிரகாரத்தில் ‘திருடர்கள் ஜாக்கிரதை’
என்று சாத்தான் வேதம் ஓதினர்.
பூனல் போட்டவர் கால் கலுவு,
சந்தணமிடு,
தொட்டு வணங்கி,
கை கூப்பி,
தலைகுனிந்தே இரு என்றனர்.
மந்திரம் விற்றால்
‘அவர்’ ரென்றனர்,
மலம் அள்ளினால்
‘அவன்’ னென்றனர்,
’செய்தொழில் வேற்றுமை இல்லை’ என்று வள்ளுவன் மொழி ஒப்புவி என்றனர்,
குப்பை அள்ளுகிறவர்களை பார்த்தால்
எட்டியே நட என்றனர்,
மாலைகளிட்டு திரைநாயகர்களுக்கு
மரியாதை செய்தனர்,
தமிழர் நாம் தமிழர்
என்று திமிரினர்,
பிறகு யார் அந்த
பறையர்?
துளுக்கர்?
கல்லர்?
தேவர்?
பிள்ளை?
இன்னபிற என்றேன்?
பதிலாக பல்லை காட்டினர்,
ஆறாவது அறிவு
மனிதனுக்கு மட்டும் தானென்றனர்,
பின்னேன் பொய்களூட்டப்பட்ட
கல்லுக்கு பாலென்றேன்
மூடு உன் வாயையென்றனர்,
இராப்பசிக்கு பெண்னை கட்டினர்,
பகல் பசிக்கும் சேர்த்து அவளப்பன்
உழைப்பை கேட்டனத்தினர்,
கற்க கசடற வென்றனர்,
எதையும் கற்காமல்
கறைத்து மட்டுமே குடித்தனர்,
அழிவில்லாதது கல்வி என்றனர்,
அதை வைத்துக்கொண்டே
பணப்பிசாசுகளின்
காலில் விழுந்துகிடந்தனர்
ஊர்வாயை பிளக்கவைக்கும்
உபரிச்சொத்தின் அளவைப்பெருக்க,
தனக்கு கற்பிக்கப்பட்டதையே
எனக்கும் கற்பித்தனர் அதை
கொஞ்சம் கூட ஆய்வுக்கு உட்படுத்தாமல்.
நாமாவது ஆய்வுக்கு உட்படுத்த முனைந்தால்
வயிற்றுப் பிழைப்பை பாரென்றனர்,
நாமும் உண்டு கழித்து
புணர்ந்து ஈண்டு மடியும்
நாலுகால் ஜந்துக்களென்றெண்ணி.
                               -  அ ரா