Saturday 7 February 2015

கோமகள் கனலி


1
இளவரசி கனலி சினத்தின் உச்சமாய் உருமாறியிருந்தாள். அரசவை மந்திரிகள், அவளை நெருங்கத் திரணியற்று, தூரமாக நின்றுக்கொண்டிருந்தனர். அவள் தான் வாளை எடுத்து,
“ என்ன பார்க்கிறீர்கள்? இந்தக் கனலி மனம்பொருந்திய பூக்களுடனும், தோகை விரித்தாடும் மயில்களுடனும், அரண்மனை தோழிகளுடனும் சிரித்து விளையாடும் பச்சிளங் கோமகளென்று எண்ணினீரா? இந்தப் பாண்டிய நாடு மலை வளத்துக்கும், அழகு கொழிக்கும் இயற்கைகும் மட்டும் சிறப்புற்றதல்ல. எதிரிகளை வேட்டையாடும் வீரத்திற்கும் சிறப்புற்றதே. இங்கு வீரத்திற்குப் பால் பேதம் தெரியாது. அங்கு என் தந்தை போர்களத்தில் மாய, இங்கு என்னைப் பட்டு விரிப்பில் துயில் கொள்ளச் சொல்கிறீரா? என்னிடமும் வாளுண்டு. அதன் வேகத்தை இனி பார்ப்பீர்கள். அந்தச் சுந்தரச் சோழனின் தலையைக் கொய்து, பாண்டிய தலைநகரான மதுரையில், இருகரைத் தொட்டோடும் வைகையின் மீன்களுக்கு இரையாக்குவேன். அதையும் பொருத்திருந்து பாரீர்”
கனலியின் கண்கள் தழலென, அவர்களை அஞ்ச செய்தது. பெயருக்கேற்றார் போல் கனலென உருப்பெற்றிருந்தாள். அவர்களால் இளவரசி கனலியை தடுக்க முடியவில்லை. சோழன் தலையைக் குறிவைத்த பருந்தாகப் போர்களம் சென்றாள் வீரக் கோமகள் கனலி.
2
”யோவ், பக்கத்துல போய்ராத. அப்புறம் அவ்வளவு தான். ரொம்பப் பக்குவமாதான் இந்தக் கிழவிய ஹேண்டில் பன்னனும்”
“என்னய்யா ஆச்சு? திடீர்னு இந்தப் பைத்தியகார கிழவிக்கி.......... டாக்டர் வரதுக்குள்ள இந்தக் கட்டிப் போடனும்”
“என்ன பண்ணித்தொலைய.. இப்ப இந்தக் கிழகி என்னைக்கும் இல்லாம இன்னைக்கி கோவமா இருக்கு. கைல ஏதோ இரும்புக் கம்பிவேற வச்சுருக்கு. கொஞ்சம் சாந்தப்படுத்தித் தான் மயக்க ஊசிப் போட முடியும்.. இப்ப இதுக்கிட்ட போகவே பயமா இருக்கு.”
அந்தக் கிழகி தன் போக்காகப் பேசிக்கொண்டே வாசலை நெருங்கினாள். இருவரும் கிழகியை, சங்கிலியால் கட்ட முயன்றனர். ஆனால் கிழகி அவர்களைக் கீழே தள்ளி கதவை வெளிப் புறமாகத் தாழிட்டு ஓடிவிட்டது.
3
நீள வானத்தின் கீழ் செங்கடல் போல, போர்களம் குருதியில் மூழ்கியிருந்தது. கடலில் மீன்கள் துள்ளுவது போல், இருநாட்டு வீரர்களும் தன் மார்புகள் கிழிய, குருதி கொட்ட துடிதுடித்து மாய்ந்துக்கொண்டிருந்தனர். வேல்களும் வாளுகளும் அவள் கண்களையும் மார்புகளையும் குறிவைத்து எய்தப்பட்டிருந்தது. கனலிக்கு இவை எதுவும் பயம் கொள்ளச் செய்யவில்லை. போரும் காயமும் குருதியும் பாண்டிய நாட்டுமக்களுக்குப் பிறவியிலேயே ஊறியிருந்தது. சீறிவரும் சர்பமாகக் கணநேரத்தில் தன் வாளுக்குச் சோழ வீரர்களை இரையாக்கினால். கண்களின் ஆக்ரோஷமும், வாளின் வேகமும் எதிரிகளை நிலைக் குலைய வைத்தது. கனலியில் திறன் பாண்டிய நாட்டு வீரர்களுக்கு ஊக்கம் தரும் மருந்தாக இருந்தது. வீரக் கோமகளின் தலைமையில் பாண்டிய படை, சோழப் படையைப் பின்வாங்க வைத்துக் கொண்டிருந்தது.
4
மனநோய் முற்றிப்போன சில பைத்தியங்களை ஒரு தனி அறையில் சங்கிலிகளால் பிணைத்து, அடைத்து வைத்திருந்தனர். அங்கு இருப்பவர்ளிடம் சற்றுத்தள்ளியே இருக்க வேண்டும். என்ன நேரத்தில் என்ன செய்வார்களென்று யாருக்கும் தெரியாது. வெளியே ஓடுவந்த பைத்தியக்காரக் கிழவி, அந்தத் தனியறைக்குள் அவள் வைத்திருந்த இரும்புக் கம்பியுடன் புகுந்தாள். கண்னில் பட்டவர்களை இரும்புக் கம்பியால் தாக்கினாள். சில பைத்தியங்கள் வலித்தாங்காமல் அலறியது. சில பைத்தியங்கள் அவளைத் தன் கைகளாலும் கால்களாலும் தாக்கியது. கிழவிக்கு வலி பெரிதாகப் படவில்லை. மேலும் மேலும் தாக்க ஆரம்பித்தாள்.
5
போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியது. சோழப் படை சுருங்கம் காணத் தொடங்கியது. தன் போர்திறமையால் பாதி வெற்றியை ருசிக்கத் தொடங்கினாள் கனலி. சுந்தரச் சோழனின் தலையை வைகை மீனுக்கு இரையாக்கும் சபதம் கைக்கூடும் தருணம் நெருங்கியது. வெப்பமும் குருதியும் சூழ, பாண்டியர்களின் எதிரி சுந்தரச் சோழனை கண் முன்னே சந்தித்தாள். இருவருக்கும் பலமான சண்டை நடந்தது. அவர்களின் வாள்கள், இடியும் இடியும் உரசிக்கொள்வது போலிருந்தது. கனலி தன் வாள் வீச்சால், சுந்தரச் சோழனின் வாளை இழக்க வைத்தாள். அவன் நிராய்தபாணியாக அவள் முன் நின்றான். வைகை மீனுக்கான இரையை அவள் கொய்தாள். தலையில்லா முண்டமாக அவள் முன் அவன் சரிந்து விழுந்தான். அவள் முகத்தில் வெற்றிக்களிப்புப் பிரகாசிக்கத் தொடங்கியது. மதுரையின் வானம் பிளக்க கனலி ஒரு ஆங்காரச் சிரிப்பு சிரித்தாள். அவள் சற்றும் எதிர்பாராமல், அவள் மார்பில் ஒரு வேல் வந்து பாய்ந்தது. வெற்றியை முழுதாக அனுபவிக்கும் முன் பாண்டிய நாட்டு வீரக் கோமகள் கனலி போர்களத்தில் மாய்ந்து போனாள். அவள் உயிர் பிரியும் முன் ஏதோ முனுமுனுத்தாள்.
6
பைத்தியக்காரக் கிழவி பெரும்பாலானவர்களை அடித்து, வலியால் மயக்கமுறச் செய்தாள். அவள் வெறி அடங்குவதாகத் தெரியவில்லை. கடைசியில் கல்தூண் போல வளர்ந்திருந்த ஒருவனைக் கிழவி முடிந்தமட்டில் வெறிக்கொண்டு இரும்புக் கம்பியால் அடித்தாள். அவனுக்கு அது வலிக்கவில்லை. இன்னும் வெறிக்கொண்ட கிழவி, அவன் கழுத்தில் கம்பியைக் கொண்டு அடித்தாள். வலியில் அவன் துடித்துக் கத்தினான். கிழவிக்கு இது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். பெரிய சத்தத்துடன் ஆனந்தமாகச் சிரித்தாள். வலியால் கோவம் கொண்டவன், அந்த இரும்பு கம்புயை பிடுங்கி, அவள் மார்பில் குத்தி இறக்கினான். எந்த அசைவுமற்று அப்படியே தரையில் விழுந்தாள். அவள் உயிர் பிரியும் முன் ஏதோ முனுமுனுத்தாள்.
7
”பாவம்ய்யா கிழவி, எப்பையுமே அந்தக் காலத்து ராஜாகளோட சினிமாவ பாத்துட்டு ஒலறிக்கிட்டு இருக்கும். அன்னக்கினு பாத்து, வெறி புடிச்சிருச்சு. அதொட கம்பியாலையே குத்துப்பட்டுச் செத்துப் போச்சு”
“ஆமா கடைசில என்னமோ வாய்ல அனத்திக்கிட்டே இருந்துச்சே?”
“ என்னமோ சொல்லுச்சே... ம்ம்ம்...
நாபகம் வந்துருச்சு... “
“என்னையா?”
“ ’இந்தச் சுந்தரச் சோழனோட தலைய... வைகை மீனுக்கு இரையாக்கிருங்க... இரையாக்கிருங்க...இரையாக்கிருங்க....’னு ”...........

அலெக்ஸியின் கடைசி நாவல்


லாவண்டரா எழுத்தாளர் அலெக்ஸியின் மேஜையை ஆராய்ந்துக்கொண்டிருந்தாள். கருப்பு மையால் எழுதப்பட்ட வெள்ளை காகிதங்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அதை அவிழ்த்து, அவற்றில் இருப்பதை வாசிக்கத் தொடங்கினாள் லாவண்டரா. அவற்றில் எழுதப்பட்டிருந்தவை கீழ்வருமாறு:
அலெக்ஸியாகிய நான் இந்த நாவலை எழுதத் தொடங்கயில்..............
.
.
.....அவளுக்கு அந்த வகையான மரணம் தான் பிடித்திருந்தது. அதனால் தான் அவள் அதைத் தேர்வு செய்தாள்...........
.
.
.
...... உடல் முழுவது தீ பற்றி எரிந்த போதும், க்லாரா எந்த அசைவுமின்றி நின்றுக்கொண்டிருந்தாள்........
.
.
.
.....ஆன் செய்த ஒரு கெமராவை தன் முன்பாக வைத்து, தன் இரண்டு கை நரம்புகளை ஒவ்வொன்றாகக் கத்தியால் அறுத்துக்கொண்டான். பின் அந்த வீடியோவை பார்த்துக்கொண்டே, ரத்தம் முழுதும் வெளியேறி இறந்துப்போனான்.
.
.
.
பின் குறிப்பு - எந்த விதமான வலியையும் அனுபவிக்காமல் சாக நினைப்பவர்கள் விஷத்தை தேர்வு செய்யலாம்.
தூக்குப் போட்டுக்கொள்வது :
தேவையான காரணங்கள் – காதல் தோல்வி, பள்ளி / கல்லூரி பரிட்சையில் தோல்வி, தீராத வியாதி / வலி, வறுமை…………
தேவையான பொருட்கள் – ஒரு இன்ச் விட்டம் உள்ள பலமான கயிறு 3 முதல் 5 அடி அல்லது பழைய சேலை, மின்விசிறி, ஸ்டூல், தனி அறை.
செய்முறை – முதலில் நீங்கள் இருக்கும் அறையை உள்தாப்பாளிட்டுக் கொள்ளுங்கள். ஸ்டூலில் ஏறி கயிறு அல்லது சேலையின் ஒரு முனையை மன்விசிறியின் மேல் கம்பியில் இறுக்கமாகக் கட்டவேண்டும். இழுத்துப்பார்த்து உறுதிசெய்துக் கொள்ளவும். மறுமுனையை உங்கள் தலை நுழையும் அளவிற்கான விட்டத்துடன் ஒரு முடிச்சுப் போட்டுக்கொள்ளுங்கள். இங்கு உருவாஞ் சுருக்கை தவிர்க்கவும். பின் உங்கள் தலையைக் கயிற்றிலுள்ள வட்டத்தில் நுழைக்கவும். உங்கள் கால்களால் ஸ்டூலை எத்திக்கீழே தள்ளவும். இப்பொழுது எந்த வித துணையுமின்றி உங்கள் உடல் கயிற்றில் தொங்கும். மெல்ல கழுத்தை கயிறு இறுக்கிக்கொண்டே இழுக்கும்.
தனிச் சிறப்பு – தங்கள் சாவை அனுபவிக்க விரும்புவோர் இதைத் தேர்வு செய்யலாம்.
தீக்குளிப்பது :
தேவையான காரணங்கள் – கணவரின் குடிப்பழக்கம், கணவர் அல்லது மனைவியின் கள்ள உறவால் மனமுடைந்தவர்கள்,,……
தேவையான பொருட்கள் – மண்ணென்னை அல்லது வேறு எரிப்பொருள் 15 முதல் 25 லிட்டர், எளிதில் தீ பற்றக்கூடிய ஆடை, தீப்பொட்டி, தீக்குச்சி, தனியறை.
செய்முறை - முதலில் நீங்கள் இருக்கும் அறையை உள்தாப்பாளிட்டுக் கொள்ளுங்கள். மண்ணென்னை அல்லது வேறு எரிப்பொருளை உங்கள் உச்சந்தலை வழியாகப் பாதம் வரை நனையும் படி ஊற்றிக்கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் முழுதாக நனைந்திருப்பீர்கள். தீக்குச்சியைப் பற்றவைத்து அதை உங்கள் உடலில் வைக்கவும். சிறிது நொடிகளில் ஆடை முழுவதும் தீப்பற்றிக்கொள்ளும். முதலில் உங்கள் ஆடை முழுவதும் எரிந்த பின், தீ உடலை அடையும். உங்கள் உடல் சாம்பலாகும் வரை கொஞ்சம் காத்திருக்கவும்.
பி.கு - ஒருவேளை நீங்கள் பாதி எரிந்து கொண்டிருக்கும் பொழுதே யாராவது உங்களைக் காப்பற்றினால், அதற்குச் சம்மதம் சொல்லாதீர். தீக்காயத்தின் வலி உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிடும். ஜாக்கிரதை.
சிறப்பு - மன தைரியம் அதிகம் உள்ளவர்கள், தன் சாவை கொடூரமாக நிகழ்த்த விரும்புவோர், தங்கள் எதிர்பை பொது ஜெனத்திற்குக் காட்ட விரும்புவோர் இதைத் தேர்வு செய்யலாம்.
தண்டவாளத்தில் படுப்பது :
தேவையான காரணங்கள் - வறுமை, இன்னபிற.......
தேவையான பொருட்கள் - மணிக்கு 100 கி.மீ செல்லும் அதிவிரைவு ரயில் அல்லது விரைவு ரயில், ஆள்நடமாட்டம் இல்லாத தண்டவாளம்.
செய்முறை - மணிக்கு 100 கி.மீ செல்லும் ரயில் வரும் பொழுது, உங்கள் தலையை அல்லது உங்கள் முழு உடலை தண்டவாளத்தில் படும்படி படுக்கவும். பயந்த சுபாவம் உள்ளவர்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். ரயில் உங்கள் அடித்துத் தூக்கிப்போடும் வரை அப்படியே இருக்கவும்.
சிறப்பு - தன் சாவை பிரபல படுத்தவிரும்புவோர் இதைத் தேர்வு செய்யலாம்.
உயர்ந்த கட்டடத்திலிருந்த குதிப்பது :
தேவையான காரண.....
.
.
.
.
.....அவன் சிறுவயதாக இருந்த போது, தெருவிலிருந்த ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட கிழவி இப்படிதான் பெட்ரோல் ஊற்றி தன்னைப் பற்றவைத்துக்கொண்டாள்......
.
.
.
.....அவளுக்குச் சங்கு உள்புறமாக இழுத்தது. கண்கள் வெளியே பிதுங்கத்தொடங்கியது. பேச முடியவில்லை......
.
.
.
......பத்து மாடி உயரம் அங்கிதாவுக்குப் பயத்தை உண்டுசெய்தது. ஆனாலும் கண்களை இருக்க மூடிக்கொண்டு குதித்தாள்....
.
.
....மேஜை மேல் எழுதிய கடிதத்தை வைத்தாள்........
.
.
.
லாவண்டரா அந்தக் கட்டிலுள்ள அணைத்து தாள்களையும் படித்துவிட்டு, அலெக்ஸின் உதவியாளரை அழைத்தாள்.
“ ஏன் சார் இதெல்லாம் அச்சாகம அப்பிடியே இருக்கு? ஏன் இந்த அலெக்ஸி நாவலா போடல?”
“ மேடம் இது அவரோட கனவு நாவல். இத எப்பிடியாவது வெளியிடனும்னு ஆசைப்பட்டார். அதுக்கான வேலைல இருக்கும் போது தான் அவருக்கு ஹாட் அட்டாக் வந்து போய்ச் சேர்ந்துட்டார். அவர் தன் சாவ அனுபவிக்கனும்னு நனைச்சார். கடைசில இப்பிடியாகிருச்சு”
“சரி. இத நானே ரிலீஸ் பன்றேன்”னென்று அலெக்ஸியின் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
இரண்டு மாதத்தில், லாவண்டரா சொன்னபடியே அதை நாவலாக வெளியிட்டாள்.
அந்த நாவலை படிக்க விரும்புவோர், புத்தகக் கடைகளில் அலெக்ஸியின் “தற்கொலை குறிப்புகள்” நாவல் என்று கேளுங்கள்.

என் அறை


“இது தான் என் அறை. நான் இங்கு வர விரும்பி, பெரிய போராட்டத்திற்கு பின்பே, எனக்கு இந்த அறையை கொடுத்தார்கள். சிறிதாக இருந்தாலும், எனக்கும் போதுமானதாக இருக்கிறது. எப்பொழுதுமே இருட்டாகவே இருக்கும், அந்த இருள் தான் எனக்கான இன்பத்தை தருகிறது. என் அறையை சுற்றிலும் டிசம்பர் பூக்களும், ரோஜா பூக்களும் நிறைந்திருக்கும். என் அறையை போல நிறைய அறைகள் அருகில் உள்ளன. அங்கு இருப்பவர்களை நான் தொந்தரவு செய்யமாட்டேன். அவர்களும் அப்படியே. இந்த அறையில் நான் மட்டுமே இருப்பேன். யாரையும் அனுமதிக்கமாட்டேன். வெளியில் இருப்பவர்கள், நான் எப்பொழுதும் தூங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் நான் எப்போதாவது தான் தூங்குவேன். பெரும்பாலான நேரங்களில், என் பால்ய வயது சுவை நிறைந்த அனுபவங்களை அசைப்போட்டுக்கொண்டிருப்பேன். அந்த மொட்டை வெயில் மைதானங்களிலும், பாழடைந்த நாயர் வீட்டிலும் தான் என் மனம் அலைந்துக்கொண்டிருக்கும். என் பள்ளிக்காதலியை பற்றி நிறைய கவிதைகள் யோசித்துவைத்திருக்கிறேன். க்ரைம் கதைகள் கூட யோசித்துவைத்திருக்கிறேன். ஆனால் அதை எழுதிவைக்க காகிதங்கள், என் அறையில் கிடையாது. என்னை நிங்கள் அனாதை என்று எண்ணிவிடாதீர். எனக்கும் உறவுகள், நண்பர்களுண்டு. எப்போதாவது வருவார்கள். என் அறை வாசலில் வந்து என்னை அழைப்பார்கள். எனக்கு என் அறையை விட்டு வெளியே வர இஷ்டமில்லை. அதனால் அப்போது மட்டும் தூங்குவது போல் நடிப்பேன். அவர்களும் அதை உண்மை என்று நம்பி போய்விடுவார்கள். ஹா ஹா ஹா.. முட்டாள்கள்…. முட்டாள்கள்…. இங்கு இருக்கும் பொழுது யாரைப்பற்றியும் பயங்கொள்ள தேவையில்லை. சில நேரம், நான் குதுகலத்தில் கூச்சலிடுவேன், சத்தமாக பாடுவேன், கோபத்தில் அறைக் கதவை பலமாக எத்துவேன். ஆனால் நான் செய்வது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாதவண்ணம் அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ன? உங்களுக்கும் என் அறை மீது காதல் வந்து விட்டதா? கவலைப்படாதீர் இங்கு சில அறைகள் காலியாகத் தான் உள்ளது. சிக்கிரம் வாருங்கள்…. ஓ…. விலாசம் கேட்கிறீர்களா? ம்ம்ம்... குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
மதுரை,
திருப்பரங்குன்றம் சாலை,
புனித மாதா கல்லறைத் தோட்டம்.
இன்னுமென்ன யோசனை கிளம்புங்கள். நான் காத்துக்கொண்டிருக்கிறேன். ம்ம்ம்.. சீக்கிரம்…….

ஓவியம்

நான் பத்தாவது படிக்கும் பொழுது, பக்கத்து வீட்டில் புதிதாக ஒரு குடும்பம் குடித்தனம் வந்தது. முன்பு அக்கிரஹாரத்துத் தெருவில் இருந்தவர்கள். அவர்களுக்கு கல்லூரி இறுதியாண்டில் படிக்கும், காயத்ரி என்கிற மகள் இருந்தாள். பார்ப்பவர்கள் சொக்கும் வண்ணம், வெள்ளையும் பலுப்பும் கலந்து பலுங்கி நிறத்தில் இருப்பாள். மேலும் மூக்குத்தி பிதானமாக, அதாவது அதை மையப்படுத்தி வரையப்பட்ட முகம் போலிருக்கும். கன்னங்கள் வசிகரமான அளவுடன் இருக்கும். அதற்கு நெய்யும், தயிரும் முதற்க்காரணமாக இருக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் அவள் வீட்டில் ஸ்லோக வகுப்புகள் நடக்கும். என் நன்பர்கள் பெருமாலுக்கு படைக்கப்பட்ட நெய்வேத்தியத்திற்காக செல்வர். நான் அவளை காணச்செல்வேன். காரணம், அவள் சரஸ்வதி சிலைக்கு முன் சாஷ்டாங்கமாக அமர்ந்து, ஸ்லோகங்களை ஒரே ராகத்தில் பாடுவாள். அப்போது அவள் முக அசைவுகளில் உள்ள ஈர்ப்பு, அவளுடலில் முகத்தைத் தவிற வேறு எதையும் காணவோ, ரசிக்கவிடாது. பாடும்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும். பின்பு நான் மேல்நிலைப் படிப்புக்காக வெளியீர் சென்றுவிட்டேன். அவள் முகத்தைப் பற்றி என்னுள் கொஞ்சகாலம் சிலாகித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைகளில் வரும் பொழுது அவளை பார்ப்பேன். சிரிக்கும் பொழுது, குவிந்து எழும் கன்னத்தின் வசீகர அளவில் எந்த மாற்றமும் அவள் செய்திருக்கமாட்டாள். மேல்நிலையிரண்டாம் ஆண்டில் நான் வீட்டிற்கு வரவில்லை. இரண்டாமாண்டு தேர்வை முடித்தப்பின் தான் வீடுவர முடிந்தது. அன்று அவள் வீட்டில் விஷேசம் என்பதாள், நான் சென்றிருந்தேன். அவள் சதுரமான முகத்தில் பலப்புதிய வசீகரங்கள் முளைத்திருந்தன. நெற்றிப்பொட்டிலும், தலையுச்சித் தொடங்கும் இடத்திலும் குங்குமத்தின் செம்மை ஆக்கிரமித்திருந்தது. வெற்றுநெற்றியை விட இது அவள் முகத்தை ருசிகரிக்கச்செய்தது. வண்ணங்கள் புகுந்த கோலம் போல இருந்தது. பின் அவளை பார்க்கவில்லை. முப்பது ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் அவளுடை திருமணத்தின் பின்னான முகம், நம்மை மயக்கிவைத்த ஓவியம் போல எனக்கு ஒரு சுழியும் மாறாமல் நினைவிருக்கிறது.........