Sunday 26 January 2014

என் இனிய பொண் நிலாவே 1



கண் விழியால் வீழ்த்தி ,
கண்ணக்குழியில் தள்ளி,
கூந்தலால் புதைத்தாள்
என்னால் எழவும் முடியவில்லை
அழவும் முடியவில்லை……

அவள் அழகில்
என் ஆன்மாவை அடிமையாக்கினால்,
என் ஆண்மையை அனாதை யாக்கினாள்…..

அவள் மிகவும் அழகு இல்லை..  ஆனால்
அவளைவிட மிகையான அழகு  இல்லை….

வேதியலுக்கும் வேர்த்து கொட்டும்
உன்  ரசாயண பார்வையில்…..

கல்லறையிலும் கடை விரித்திருப்பாள், என்
கண்களை காவு வாங்க…..

மது அருந்தியும் இறங்கவில்லை
அவள் போதித்த போதை…...

வெயிலை வேடிக்கை பார்த்தேன்,
மழையுடன் மல்லுக்கட்டினேன்,
விடியும் வரை விழித்திருந்தேன்,
இருட்டும் வரை உறங்கினேன்….

அவளை நினைக்கையில் மனதில்
எரிகற்கள் மழை,
வால் நட்சத்திரங்களின் அலை..


கார் மேக கண்ணழகி என் கண் முன்னே
கரைந்த்தினால் காயப்பட்டு கதறியது
என் அடை மழை…..

கவிதை கரையில் கால் நனைத்தேன்,
உன் காதல் கடலை கடந்த பின்…..

No comments:

Post a Comment