Friday 2 October 2015

நாற்றம்

*                     
            எனக்கு வெள்ளை நிறம் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவள் அணிந்திருக்கும் வெள்ளை ப்ரா எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பல இடங்களில் மஞ்சள் கரைகள் படிந்திருக்கிறது. இந்த இருட்டரையில் அந்த வெள்ளை ப்ரா மட்டும் தனியாக தெரிகிறது. அது எனக்கு வெருப்பையூட்டுகிறது.
              “ப்ராவ கழட்டியெரி”
              “இருயா”
          ப்ராவை மட்டும் அல்ல, இவளையும் எனக்கு பிடிக்கவில்லை. வயது முப்பதிற்கு மேல் இருக்கும். கறுத்துப் பெருத்து, எவ்வித கவர்ச்சியுமற்று இருக்கிறாள். வீங்கித்தொங்கும் வயிற்றை பாக்கவே உமட்டுகிறது. கண்டிப்பாக இவளுக்கு இரண்டு குழந்தைகளாவது இருக்கும். தலையில் இருக்கும் மல்லிகை பூவையும், ஹேர்பின்னையும் எடுக்கவே இவ்வளவு நேரம் ஆக்குகிறாள். எனக்கு கட்டிலில் இருக்க அசெளகர்யமாக இருக்கிறது. இதில் இவள் வேர்வை நாற்றம் வேறு.
       ‘பன்னி, பன்னி….’
          இவளைவிட குறைந்த வயதில், இருவது வயதில் கூட. ஏன் பதினைந்து வயதுகளில் கூட பெண்கள் இருந்தனர். அதில் ஒருத்தி பார்ப்பதற்கு பக்கத்துவீட்டு பெண்னைப் போல இருந்தாள். அவள் பத்தாவது தான் படிக்கிறாள். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. வெருப்படைந்து பஸ் ஸ்டாண்டில் நின்றுக்கொண்டிருக்கும் போது தான் இவள் வந்தாள். இவளாகத் தான் என்னிடம் வந்து கேட்டாள். இருப்பதை கொடுத்தாள் போது என்று சொன்னாள். காண்டமும் இருப்பதாகச் சொன்னாள்.  இவளுடைய கறுமை நிறம் என்னை மயக்கிவிட்டது. இப்போது என்னை கட்டிலில் இருந்து எழவிடாமல் செய்வதும் இந்த கறுமை நிறம் தான்.
       ‘கருப்பு பன்னி, கருப்பி’
         நான் இதற்கு முன் எந்த பெண்ணிடமோ, ஆணிடமோ புணர்ச்சியில் ஈடுபட்டதில்லை. அதை இவளிடம் சொல்ல வெட்கமாக இருந்தது. ஆனால் இதை இவள் என் முதல் நகரலிலேயே கண்டுபிடித்துவிடுவாள். அது நிச்சயம். அப்படித்தான் மருது சொன்னான்.
          அப்பாட ஒருவழியாக அந்த ப்ராவை கழற்றிவிட்டாள்.
**
         மருது, என் கல்லூரி நண்பன். விருதுநகர் பக்கம் ஏதோ கிராமத்தை சேர்ந்தவன். பார்ப்பதற்கு கட்டுமஸ்தாக இருப்பான். கறுப்பு அய்யனார் சிலையை போல இருப்பான் என்றும் சொல்லலாம். அவன் மீது எங்களுக்கு பொறாமையாக இருக்கும். மாதத்திற்கு எப்படியும் ஒருமுறையாவது, விபச்சாரிகளிடம் சென்றுவிடுவான். அப்படி ஒவ்வொரு முறை சென்றபின், அடுத்தநாள் அந்த அனுபவங்களை எங்களிடம் சொல்லுவான். அந்த பேச்சுகள் தான் என்னை இந்த கட்டில் வரை கொண்டுவந்திருக்கிறது. மருது சொன்னதையெல்லாம், என்னிடம் கேட்காதீர். அந்த அனுபவங்களை அவனைப் போல பெற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்னைப் போல முயலுங்கள்.
***
         மருது ஒரு மகான். ஆம். அவன் சொன்னபடியே இவள் கண்டுபிடித்துவிட்டாள். அதற்கு ஏன் இந்த நமட்டுச் சிரிப்பு. இது இவளுக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும். நிச்சயமாக.
          கரண்ட் கட். இன்னும் அதிக வியர்வை. இன்னும் அதிக நாற்றம்.
         இவள் எதையும் (நான் காட்டும் உண்ர்ச்சிகளைப் போல) காட்டுவதாக தெரியவில்லை. மருது சொன்னபடியே தான் இவளும் நடந்துக் கொண்டாள். ஆம். மருது ஒரு மகான்.
         “இது உனக்கு எத்தணாவது முற?”,நான்.
        “இன்னைக்கா?”
       அடுத்து பேசவில்லை. உண்மையிலேயே நான் கற்பனை செய்ததைக் காட்டிலும் ரொம்ப போதையாக இருக்கிறது. இல்லை. இல்லை. இதை போதை என்று சொல்லமுடியாது. என்னை பொருத்தவரை, ஒன்றை நாம் அனுபவிக்க வேண்டும் அதுவே போதை. அந்த ஒன்று நம்மை அனுபவிக்க கூடாது.
       இல்லை இல்லை. இது போதை தான்.
****
      “எப்பயுமே உன்னோட பேச்ச கேக்குற மாதிரி அதிகாரமா நடந்துக்க. அவளுக சொல்றபடி நடந்துக்காத. அப்புறம் அவ்வளவு தான். உன்ன விடமாட்டாளுங்க. தே.. பு..”, மருது.
*****
       த்தா… மருது ஒரு மகான் தான்.
******
       “………………………..”
*******
      ஃபேண்டை அணியும் பொழுது, அவளிடம் அவள் சொந்தக்கதையை கேட்க வேண்டும் போல் இருந்தது.
********
      மருது பல விபச்சாரிகளின் கதைகளை சொல்லியிருக்கிறான். சிலர் அழுதுக்கொண்டே சொல்வார்களாம். சிலர் ’தம்பி’ என்று அழுதுக்கொண்டே சொல்வார்களாம். சிலர் ‘சும்மா தான்’ என்று முடித்துவிடுவார்களாம்.
*********
      ஆனால் இவளிடம் கேட்க போவதில்லை. கேட்டு கதை எழுத, நான் என்ன எழுத்தாளனா?
**********      
  இன்னும் கரண்ட் வரவில்லை. அவள் வியர்வை முழுக்க என்மீது இறக்கிவிட்டாள். என் சட்டையை வைத்து துடைத்துக்கொண்டிருந்தேன்.
என்னாலேயே என்னுடைய இந்த நாற்றத்தை பொருத்துக்கொள்ளமுடியவில்லை.                            

No comments:

Post a Comment