Sunday 27 April 2014

வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடை

வாழ்க்கை  என்பது  ஒரு  நாடக  மேடை
                                  சமிபகாலமாய் பிரபல  தனியார்  தொலைகாட்சியின்  தினசரி  நாடகங்களை  பார்க்க  நேர்ந்தது.  ஆஹா  என்ன  அருமையான  கதைகள்  வசனங்கள் . காலையில்  ஒரு  ஐந்து  நாடங்கள்,  மாலையில்  ஒரு  ஐந்து  நடகங்கள்.  இந்த  நாடங்களில்  வரும்  பெருபாலான  நாயகி  அல்லது   நாயகர்கள்  அவர்களுடன்  திருமணமானவர்களுடன்  வாழாமல்  இன்னொறுவருடன்  வாழ்கிறார்கள்.  அடுத்தவன்  மனைவியை  எப்படி  வசியம்  செய்து  அடைவது  என்று  துடிக்கும்  ஆண்,  அடுத்தவன்  கணவனை   அவன்  சொத்துக்காக  அவன்  மனைவியிடம்  இருந்து  பிரிக்க  நினைக்கும்  பெண்  என்று  நாடக  தயாரிப்பாளர்  எப்படி  தான்  கதாபத்திரங்களை   படைக்கிறார்களோ.  ஒரு  நாடகத்தில்  கணவன்  தன்  மனைவி  கற்பமாக  இருப்பதை  கொண்டாட   அவன்  மனைவிக்கு  இனிப்பு  வழங்குகிறான்,  ஆனால்  மனைவியோ  குடும்பத்தினர்  முன்னிலையில்  மருத்துவரிடம்  எனக்கு  DNA TEST  எடுக்கனும்,  யார்  குழந்தைக்கு   அப்பானு  தெரியனும்  என்கிறாள். அதே  நடகத்தில்  தன்  குடும்பத்தை  எப்படி  அழித்து,  அவர்களை  அடக்கி  தன்  வழியில்  கொண்டுவருவது  என்று  சதா நேரமும்  யோசிக்கும்  அண்ணி.  அதே  போன்று  தன்  மருமகளை  பிடிக்காததால்   அவளை  தன்  மகனிடம்  இருந்து  பிரித்து,  இன்னொறுவன்  மனைவியை  அவள்  கணவனிடம்  இருந்து  பிரித்து  (  இதற்கு  அந்த  பெண்ணின்  தாயும்  உடந்தை)  தன்  மகனுக்கு  கட்டி  வைக்க  போராடும்  தாய். மனைவியை  வீட்டில்  விட்டு விட்டு,  முதலாளியுடன்  காதல்  வசனங்கள்  பேசிகிறான்  ( நாங்க  கூட  இவளோ  ரொமாண்டிக்கா  பேசுனதில்ல). சில  நேரங்களில்  ஆபாசங்களும்  நிகளும்.  எத்தனை  வக்கிரம், கெட்ட  எண்ணம்,  துரோகம்,  காமம் (காதல்  என்ற  பெயரில்).  இன்னும்  ஏகப்பட்டது  இருக்கிறது.  இதை  பார்த்தால்  நம்  கலாச்சாரம்  (  எல்லாரும்  இப்ப  கலாச்சாரம்  சீரழியுதுனு  சொல்ராங்க,  அதான் நானும்  சொன்னே மத்தபடி  எனக்கு  கலாச்சாரம்னா  என்னனு  தெரியாது) என்னாகும்?  ரொம்ப  வேணாம்  ஒரு  வாரம்  இந்த  நாடகங்களை  பாருங்கள்,  அடுத்தவர்  குடும்பத்தை  எப்படி  அழிப்பது,  அடுத்தவன் …..  என்று  எல்லா  கலைகளையும்  மன்னிக்கவும்  கருமங்களையும்  தெரிந்து   கொள்வீற்கள்.   சினிமா  படங்களின்  ஸ்டில்களையும்  டிரைலர்களையும்  பார்த்துவிட்டு,  இது  எங்க  சமுதாய  மக்களின்  மனம்  புண்படுவதாக  உள்ளது,  அதனால்  இந்த   படத்தை   வெளியுட  கூடாது”,     இது  எங்க  மதத்தினரின்   மனம்  புண்படுவதாக  உள்ளது,  அதனால்  இந்த   படத்தை   வெளியுட  கூடாது  என்று  கோர்ட்டில்  வழக்கு  (  ஏற்கனவே  பல  லட்சம்  வழக்கு  தீக்காம   கடக்கு )  போடும்  எனதருமை  மக்கள்  நலவிரும்பிகளே,  இந்த  நாடகங்களை    சாதிமத  பேதமின்றி   அணைத்து  தரப்பினரும்  பார்க்கின்றனர்.  இந்த  நாடகங்களை  தடுக்க   நீங்கள்  ஏதாவது  பன்னலாமே.   என்ன   வழக்கு  போட்டாலும்   கருத்து  சுதந்திரம்  என்று  முடித்து  விடுகின்றனர்.    இதத்தான்  ஷேக்ஸ்பியர்    வாழ்க்கை  என்பது  ஒரு  நாடக  மேடை,  அதில்  நாம்  எல்லாம்  நடிகர்கள்  என்றாறோ??????????????      

No comments:

Post a Comment