லோக்சபா
தேர்தலுக்கு பின் நம் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி மாறினால் அதற்கு அவர்கள் கூறும் நயமான நியாங்கள்…………….
கருணாநிதி {திமுக} : “காங்கிரஸ் நாட்டை தன் குடும்பத்துக்காக கூறுப்போட்டு விற்றுவிட்டது. எனக்கும் சரி, திமுக வுக்கும் சரி குடும்ப அரசியல் அறவே பிடிக்காது ( என்ன சிரிப்பு வேண்டிக்கடக்குது இப்ப ) அதனால் குடும்பமே இல்லாத மோடிக்கு எங்கள் ஆதரவினை தருகிறோம்”
மருத்துவர் ராமதாஸ் {பாமக}
: 5 நாட்களுக்கு முன்னாள் : “திராவிட கட்சிகளுடன் இனி ஒருபோது கூட்டணி கிடையாது”
நேற்று :
“தேசிய கட்சிகளுடன் இனி ஒருபோது
கூட்டணி கிடையாது”
5 நொடிகளுக்கு முன்னாள் : “ நாட்டின் வளர்ச்சிக்கு
’மதசார்பும் பிரிவினையும்’ கூடவே கூடாது அதனால் எங்கள் அதரவினை காங்கிரஸ்க்கு தருகிறோம்”
ஜெ., {ஆஇஆதிமுக} : “ அதிமுக ஒரு முற்போக்கு கட்சி. நமக்கு மதம் என்பது இல்லை. மதம் சார்ந்த கட்சிகளை நாம் ஆதரிக்க கூடாது. அதனால் எங்கள் ஆதரவினை காங்கிரஸ்க்கு தருகிறோம்”
(அப்ப ஏன் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்புக்கு விடியகாலைலயே போறிங்கனு கேட்டக் கூடாது. செய்வீற்களா????)
விஜயகாந்த் {தேமுதிக} : காலை 10.10 : ”மக்களே தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி “
மதியம் 1.53 : “ மக்களே மக்களுடன் மட்டுமே கூட்டணி”
மாலை 5.35 : “மக்களே, நான் இலங்கை மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ( நோட் பன்னுங்க இலங்கை மீனவர்கலாம்) டில்லில போராட்டம் பன்ன போய்ருந்தேன் . அப்போ எதர்ச்சியா நம்ம ராகுல் தம்பிய பார்த்தேன். வந்த விசயத்த சொன்னே . உடனே அவரு நாம ரெண்டு
பேரும் மத்தில ஆட்சிய புடிச்சா இலங்கை மீனவர்கள் பிரச்சனை மட்டும் இல்ல இங்கிலாந்து மீனவர்கள் பிரச்சனையக்கூட தீர்த்திரலாம்னு சொன்னாரு நான் சரினு சொல்டேன் மக்களே. ஆனா ஒன்னு மக்களே தெய்வத்துடனும் , மக்களுடன் மட்டுமே கூட்டணி மக்களே”
No comments:
Post a Comment