Saturday 19 July 2014

ஒரு வடையின் டைரி



ஒரு காலை நேரத்தில் காக்கையார் ஒருவர் ஓட்டை வடை சுட்டுக்கொண்டிருந்தார். கைப்பேசியில் அழைப்பு வந்ததால், அதை எடுக்க எழுந்துச் சென்றார். அதை பார்த்த பாட்டி ஒன்று, அவர் சுட்டக் கொண்டிருந்த ஒரே ஒரு ஓட்டை வடையை திருடிச் சென்றது. அதை காக்கையார் கவனிக்கவில்லை. ஓட்டை வடையை உண்ணப்போகையில், ஜெரி என்கிற எலியார் ஒருவர் அதைப் பார்த்துவிட்டார். பாட்டியின் அருகில் சென்று, ”உன்னோட குரல் ஸ்ரேயா கோஷல் மாதிரி இருக்கு. ரகுமான் சார் கம்போஸ்ல ஒரு பாட்டு பாடுஎன்று கூறினார். அதை கேட்ட பாட்டி, வாயை துறந்துப் பாடத்தொடங்கியது, ”முன்பே வா என் அன்பே வா…”.ஓட்டை வடை கீழேவிழுந்தது. ஜெரி ஓட்டை வடையை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். ஜெரி தன் பரம எதிரியான டாம் என்கிற பூனையாரை பொறி வைத்துப் பிடிக்க முடிவு செய்து, ஓட்டைவடையை ஓரு கூண்டில் வைத்தார். ஜெரி எண்ணியவாறே டாம் கூண்டில் மாட்டிக் கொண்டு கதறியது. இந்த விசயத்தை அறிந்த டாமின் நண்பரான ஸ்கூபிடூ, ஜெரியை தீர்த்துக்கட்டிவிட்டு, டாமை மீட்டு வருமாறு தன் செல்லப்பிராணி சக்திமெனை அனுப்பியது. சக்திமென் எஜமானனின் ஆனைக்கினங்க தன் சக்தியால் ஜெரியைக் கொன்றுவிட்டு, டாமை மீட்டது. ஆதனால் டாமுக்கு சக்திமென் மீது ஆன்புவந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது. அதற்க்கு சக்திமென், “என் காதலி பார்பியை அவள் தாய்மாமன் பாப்பாய் தன் வீட்டில் அடைத்து வைத்திருக்கிறது. அவளை மீட்கவேண்டும். அதற்கு எனக்குக் கூடுதல் சக்தி வேண்டும்என்றது. உடனே டாம், “இது தான் போக்கிமேன்பால். இதில் இருந்து வரும் சக்தி பெற்ற மிருகங்கள் உனக்கு உதவும். என்னிடம் இருக்கும் ஓரே சக்தி இதுதான். ஆனால் என்னால் இதை பயன்படுத்த முடியாது. இதை ஒரு வளர்ப்பு பிராணிதான் பயன்படுத்த முடியும்என்றார். சக்திமென் பாப்பாய்யின் வீட்டை அடைந்தது. போக்கிமேன்பாலை பிரயோகப்படுத்தி, பீக்கச்சுவை வரவழைத்து பாப்பாயை வீழ்த்திவிட்டு, தன் காதலி பார்பியை மீட்டு கல்யாணம் செய்துக்கொண்டது. தன் மனைவியுடன் அடுத்த நிமிடமே ஃப்லின்ஸ்டொனுக்கு தேன்னிலவுக்கு சென்றது. அங்கு பவர்ரேஞ்ர் ரவுடி கும்பலுக்கும் பென்டென் ரவுடிகும்பலுக்கும் சண்டை நடந்துக் கொண்டிருந்தது. பென்டென் ரவுடி கும்பலை தீர்த்துக்கட்டி, அவர்கள் பாதுகாத்து வைத்திருந்த ரிச்சிரிச்சையும் அவரின் பணத்தையும் கைப்பற்றியது பவர்ரேஞ்ர் ரவுடி கும்பல். இந்த செய்தி எப்படியோ அகில உலக சூப்பர் ஸ்டார் ஜானி ப்ராவோவுக்கு தெரியவர, தன் நண்பர் ரிச்சிரிச்சை காப்பாற்ற தன் தோழிகள் பவர்பஃப் கேல்சுடன் பவர்ரேஞ்ர் ரவுடிகும்பல் இருக்கும் இடத்துக்கு சென்றார். அங்கு பவர்ரேஞ்ர் ரவுடி கும்பலின் செல்லப்பிராணி ஹல்க் அமர்ந்திருந்தது .அகில உலக சூப்பர் ஸ்டார் ஜானி ப்ராவோவை பார்த்ததும், கோபம் தலைக்கேறி அருகில் இருந்த மலையை பிய்த்துமேலே வீசியது. அந்த மலைவானத்தில் இருந்த நிலாவில் விழுந்தது. அங்கே ஓட்டைவடை சுட்டுக்கொண்டிருந்த பாட்டியின் கடையை மலை தாக்கியது. மலைப்பாறைகள் சட்டியின் மீது பலமாக மோதியது. சட்டியில் இருந்த ஒரே ஒரு ஓட்டைவடை அங்கிருந்து தூக்கிவீசப்பட்டு, பூமியை நோக்கி வந்து காக்கையார் சட்டியில் விழுந்தது. கைப்பேசியில் தன் நண்பன் டொனால்டக்குடன் பேசிவிட்டுவந்து, சட்டியில் இருந்த ஓட்டைவடையை கரண்டியால் எடுத்தார். அன்று அம்மாவாசை என்பதால், அந்த ஒருஓட்டை வடையை, இறந்துப்போன தன் செல்லப்பிராணி ஹிமேனுக்கு மொட்டை மாடியில் படையல் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது கீழே எதோ சத்தம் கேட்க கீழே சென்று பார்த்துவிட்டு மேலே வந்தார். மேலே வந்த காக்கையார் அதிர்ந்துப் போனார். ஆம் படையலில் வைக்கப்பட்ட ஓட்டை வடையை காணவில்லை…….
-   தொடரும்  1


No comments:

Post a Comment