ஏ
பொண்ணே
ஏ பொண்ணே,
என்ன ஒரு
குழந்தைதனமான கொலை
புனிதமான பூகம்பம்
இனிமையான இடி
கலைநயமான கலவரம்
நீ என்னை கடந்துபோகும் பொழுது……..
ஏ பொண்ணே,
என்னிடம்
பூந்தொட்டிகளே
இல்லை
ஆனால் இத்தணை புதிய பூக்கள்
மீன்தொட்டிகளே இல்லை
ஆனால் இத்தனை வண்ணமீன்கள்
மழைமேகங்களே
இல்லை
ஆனால் இத்தணை குளிர் சாரல்
நீ என் தோள் சாயும்
பொழுது………..
ஏ பொண்ணே,
குடித்தேன்
முதல் மழைதுளியை
திகட்டாத தேனை
மனம்வீசும் மதுவை
உன் இதழ் நனைக்கும் பொழுது………..
ஏ பொண்ணே,
என்னுள் எத்தணை
கற்பழிப்புகள்
கீறல்கள்
கதறல்கள்
காயங்கள்
உன் கோவத்தால்……….
ஏ பொண்ணே,
என்னை சுற்றி
எத்தணை
பாலைவனங்கள்
மயாணங்கள்
பற்றிஎரியும் மரங்கள்
கரையில்லா தீவுகள்
உன் பிரிவில்……
ஏ பொண்ணே,
நான் வைத்திருக்கிறேன்
சாம்பலான சூரியன்
அழுகிய நிலா
கருகிய இரவு
ஓய்வுபெற்ற மூச்சு
ஊசிப்போன இதயம்
உன் நினைவாக……..
ஏ பொண்ணே
இந்த எல்லாவற்றுக்கும் பெயர் தான்
என்ன பொண்ணே????????............
- அரவிந்ராஜ் ரமேஷ்
No comments:
Post a Comment