எங்கள் தாய் மடியில் இருந்து வெட்டி எரியப்பட்ட
ஒரு அங்கம் நாங்கள் அதனால் தான் ஏனோ
எங்களிடம்
பால் சுரப்பதைவிட இரத்தம் தான் சுரக்கிறது
இன்னொறு அங்கத்தின் பசிக்காக….
கண்னெதிரே
மனைவி கருவருக்கப்பட்டாள்,
என் சகோதரியை அம்மனமாக அலங்கரித்து
அங்கங்களை
வாயால் கடித்து
கொதரப்பட்டாள்,
நேற்றுவரை
அப்பா என்று என் பின்னாள்
திரிந்தவள்,
இன்று என்
முன்னால் காற்றாட கால்கள் விரிக்கப்பட,
அவர்கள் ஆண்குறிகள் குறிப்பார்த்து இருந்த்து,
பூப்பெய்து
சரியாக பதிமூன்று நாட்கள்,
ஒருவன், ஒருவனாக மேய்ந்தான்,
“செத்துட்டாடா” என கதறினேன்,
அதன் பின் தான் அவர்கள் வேகம் வேகமாய் இருந்த்து.
அப்பொழுது தான்,
என் இரத்த நாளங்கள் கத்தரிக்காமலே
மூச்சுக்
காற்றில் கரைந் தொடின…..
அசிங்கம்
பீச்சிய மீத விந்தில் கருத்தரித்து,
கற்பை கடன்
வாங்கி உங்கள் கட்டில்களில்
விரிக்கப்படுபவர்களாட
எங்கள் பெண்கள்?...
இத்தனையும் கண்டு
என்னுள் நான் சாவதை
நானே ரசிக்கின்றேன்..
சிங்கலராணுவ
பாம்பின் நாக்கில் நனைந்து
நலுவி விழுந்தவன் நான்,
என் சுற்றம் அணைத்தையும் ஒரு இனத்திற்கு
இறையாக்கி,
உடம்பில் சில குண்டுகளும்,
மனதில் கருப்பு நிற நினைவுகளும் தான் மிச்சம்.
அதிலும் என் இடது பாதி கையும், வலதில்
இரண்டு மூன்று
விரல்களும் அவர்கள்
சொறிய பிய்த்து கொண்டனர்.
என் புலன்கள் எல்லாம் குடியேறிவிட்டன
நரக புழுதியில்,
என் நேரங்கள் யாவும் நகராமல் நனைந்து
கொண்டிருந்தன
அந்த நாய்களின் நாக்கில்,
பாவங்கள்
பெற்றெடுத்த பயணங்கள் நாங்கள்,
நாள்தோறும்
நரகங்களாய் கடந்துவிட்டோம்.
சம உரிமை
கேட்ட எங்களுக்கு
சமாதிகளே
உடைகளாய் கிடைத்தது,
இன்னும் கொச்சம்
நேரம் தான் புதைக்கப்படவோ
இல்லை புகைக்கப்படவோ
இல்லை அவர்கள் வளர்ப்பு
நாய்களுக்கு
ஊட்டபடவோ
இருக்கிறேன்,
மரணத்தின்
வாசலில் இருந்து திரும்பி
பார்க்கிறேன்,
என் உதடுகள் வரை வந்துவிட்டது அது,
சொன்ன மறுநொடி என்
மார்புகளில்
அவர்கள் குண்டு மழை பொழிவர்,
அதனால் என்ன நான் சொல்லியே திருவேன்,
“ நான் தமிழன் தான். இது என் நாடு தான்.
இங்கு தான் இருப்பேன்……..”
No comments:
Post a Comment