Sunday 27 April 2014

நடுத்தர நடிகர்கள்

                        நடுத்தர  நடிகர்கள்
                                 
                                       ஜனநெருக்கடி  நிறைந்த குடியிருப்பு பகுதியில் அது. பெரும்பாலானோர் தினக்கூலிகள். அதில் கட்டட தொழிலாளர்கள் வாழும் தெவில் தான் சிறுவயது முதல் வளர்ந்தாள். அவளுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை. கட்டட வேலை பார்க்கும் தாய் மட்டும் தான். பார்ப்பதற்கு உயரமாக விளையாட்டு வீராங்கனைப் போல காட்சியளிப்பாள். முகத்தில் பவ்வியம் சிறிதும் இருக்காது. தோரனை தான் நிரம்பிவழியும். எதற்கும் அஞ்சாமல், தனக்கு சரி என்று பட்டால் மட்டுமே செய்வாள். அவள் தாய் அவளுக்கு நேர்மாறானவள். மிகவும் ஒல்லியாக, பார்ப்பதற்கு சாதுவாக இருப்பாள். குணமும் அப்படி தான். நம் செயலை பார்த்து சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று எப்போதும் சமுதாயத்தின் வாய் பேச்சுக்கு அஞ்சியே வாழ்பவள். எப்படியோ தன் மகள் படிக்க விரும்பியதை அருகில் உள்ள பெரிய கல்லூரியில் படிக்க வைத்துவிட்டாள். இன்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
                பஞ்சக்கா என்னைக்கு தான் என் மகளுக்கு பட்டம் தராங்கலாம்
                அதான் நேத்தே நிறையாதடவ  சொல்லிடியே. இன்னும் ஒரு தடவ சொல்லு ஆயிரமாவது தடவ சொல்றனு போஸ்டர் ஒட்டுவோம்
                                 அம்மா வாம நேரச்சு
                                   உள்ளே சென்று கட்டில் மேல் இருந்த புதிய புடவையை எடுத்து  விரித்தாள்.
                  புதுசா இருக்கு யாரோடதுமா?”
                                    பெரிய இடத்துக்கு போறோம். படிச்சவுங்க பணக்காரங்க வருவாங்க. அங்க என் சேலைய கட்டிட்டு வரமுடியுமா? அசிங்கமாயிருக்கும். அதான் பாரதி அம்மாட்ட ஒரு புடவைய ஒரு நாள் மட்டும் தாங்கனு வாங்கிட்டு வந்தேன். உனக்கும் பாரதியோட சுடிதார் ஒன்னு வாங்கிட்டு வந்தேன். அத போட்டுக்கோ
                               தூக்கி போடுமா அத. எனக்கு தான் பட்டம் தராங்க. நம்ம துணிக்கு இல்ல. பணக்காரங்க படிச்சவுங்க அசிங்கமா நினைக்க நாம என்ன ஒன்னும் போடாமையா போறோம். உழைச்ச காசுல வாங்குன துணி தான் நம்ம மானத்தையும் தன்மானத்தையும் காப்பாத்தும். உன் உழைப்ப நீயே இழிவுபடுத்தாத
                                அதுக்கு இல்லம்மா. சமுதாயத்துல நாலு பேரு நம்மல பாப்பாங்கள்ல அவுங்களுக்கா நம்ம நல்ல துணி போடனும்மா
                ஏம்மா எப்ப பாத்தாலும் சமுதாயத்துல இப்பிடி நினைப்பாங்க அப்பிடி நினைப்பாங்கனே சொல்ற அவுங்களுக்காகவா நாம வாழனும்? அப்ப நம்மளுக்குனு எதுக்கு தனியா பெயரு? நீ உனக்கு பிடிச்ச உங்க கல்யாண புடவைய கட்டு. நான் என் பிறந்த நாளுக்கு நீ எடுத்துக் கொடுத்த வெள்ளை சுடிதார போட்டுகிறேன்
                                     மிகவும் ஏழ்மையில் வாழ்பவர்கள் கூட சமுதாயத்தின் பேச்சுக்கு எந்தவிதத்திலும் பயங்கொள்ளாமல் வாழ்க்கையை தாங்கள் விரும்பியபடி வாழ்கிறார்கள். ஆனால் இந்த நடுத்தரம் தான் சமுதாயத்துக்கு பயந்து பயந்து, தங்கள் எதார்த்தமான சிறிய ஆசைகளை கூடநாலு பேரு பேசுவாங்கஎன்று வேண்டா வெறுப்பாக துறக்கிறது. இது தான் கௌரவம் என்று மேல் தட்டை பார்த்து அவர்களாகவே ஒரு குருட்டு தனமான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, அதை நோக்கியே ஓடுகிறார்கள். அதுதான் தங்கள் வாழ்வை உயர்த்துவதுக்கான அதிகபட்ச செயல்பாடு என கனாக்கானுகிறார்கள். இந்த தாயும் அந்த வகையை சார்ந்தவள் தான்.
                கல்லூரி வளாகத்தில் அடையாள அட்டையை காட்டி இருவரும் உள்ளே சென்றனர். அது ஒரு பெயர் போன பணக்காரர்கள் பயிலும் கல்லூரி. விழாற்கு வந்திருந்த பெற்றோர்கள் கோட்டும் சூட்டுமாக இருந்தனர். ஆடம்பரத்தின் நெடி எங்கும் பரவி இருந்தது. இவற்றை பார்த்தவுடன் தாய்க்கு பயம் தொற்றிக்கொண்டது. அங்கு வந்தவர்கள் இவர்கள் இருவரையும் சம்மந்தமே இல்லாதவர்களாக கருதி பார்த்தனர்.
                ஏம்மா எல்லாரும் கோட்டு போட்டு வந்திருக்காங்க?”
                                வெளிநாட்டுகாரங்க கோட்டுப் போட்டு திரியிராங்கள்ல. அதான் ஏன் எதுக்குனு கூட யோசிக்காம இந்த வேகாத வெயில்ல இப்பிடி இவங்களும் திரியிராங்க. இப்பிடி எல்லாம் கண்மூடி தனமா அவுங்கள பின்பற்றுனா தான் படிச்சவுங்கனு இப்ப மதிக்கிறாங்க. நீ இத எல்லாம் கண்டுக்காத  
                 இருவரும் விருந்து அறைக்கு சென்றனர். சுற்றி இருப்பவர்களை வெறித்து பார்த்துக் கொண்டே அவள் மகள் பிடியில் இருந்து விலகி கூட்டத்தில் கலந்துவிட்டாள். சிறிது நேரத்தில் அதை உணர்ந்து, தாய்யை தேடிக்கொண்டிருந்தாள். அப்போது தூரத்தில் யாரோ கோவமாக கத்துவது போல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். தன் தாய் எதிரே ஒருவர் பலமாக கத்திக்கொண்டிருப்பத்தை பார்த்தாள்.
                 “who allowed these people inside the function hall. Mr. rakesh, whats happening here. This is the way you conduct the function? Take these unnecessary idiots out of this place. Otherwise Ill file complaint to your correspondent. Make it fast ”
                   “very sorry sir. Its my mistake . I take her out.”
                            ஆங்கிலத்தில் அவள் வாங்கிய அர்ச்சனைக்கு அர்த்தம் கூட தெரியாமல் அவமானத்தில் அழுதுக்கொண்டிருந்தாள். சுற்றி இருப்பவர்கள் அவளை ஏலனமாய் பார்த்தது, உடல் எங்கும் கூசுவது போல் இருந்தது அவளுக்கு. தன் தாய்க்கு என்ன நேர்ந்தது என்பதை உணர்ந்த அவள், அங்கு வேகமாக ஓடி வந்தாள்.
          “Mr., you thinking that you are well educated and disciplined then my mom. But you don’t have even basic manner to talk in public. How dare you told my mom as unnecessary idiot. I think you got education in corporation toilets. Even after saw NO SMOKING board you still contn. Your smoking. Did you have any common sence. You don’t have any rights to shout about anyone. Rakesh sir through this idiot out of campass. Mr. say sorry to my mom”
              “what? I want to say sorry? Shit…. rakesh This is big insult to me. Bye.”
              “Dash get out of my sight”
             கோட்டு போட்ட அந்த ஆசாமி வெளியேறினான். தன் மகள் கைகளை பற்றிக்கொண்டு,
                 அதான் சொன்னே அந்த துணியவே போட்டுருக்கலாம்னு
                      அம்மா இத்தன பேருக்கு முன்னாடி சிகிரெட் பிடிக்கிறான். இவன் நம்மல மதிச்சா என்ன மதிக்கலனா என்னா?”
             அவுங்க படிச்சவுங்கம்மா
            என்னத்த பெரிய படிச்சவுங்க. அவுங்க படிச்சாங்க அவுங்க குடும்பத்துக்கு செஞ்சாங்க. நாட்டுக்கு என்ன லாபம்? அவுங்க லெட்சனத்த தான் இப்ப பாத்தோமே. அவுங்கள விட நாம என்ன தாழ்ந்திட்டோம்?”
              அவள் கூறுவதும் சரி தான். அணு, துகள், நீயுட்ரான் என்று பாடம் நடத்தும் வேதியல் வாத்தியாரே, அறிவியலை நாடாமல் ஆன்மீகத்தில் மயங் கிடக்கிறார்கள். இவர்களுக்கும் பட்டப்படிப்பு இல்லாத பாமரனுக்கும் என்ன வித்தியாசம். படித்தவர்கள் தாங்கள் பெற்ற தாக கூறும் அறிவை மற்றவர்களுக்கோ, இல்லை வாழ்க்கையை நெறி செய்யவோ உபயோகிப்பது இல்லை. வெறுமன வயிற்றை கலுவத்தான் பயன்படுத்துகின்றனர்.
             எல்லாரும் என்ன கேவலமா பார்தாங்க
        அம்மா இதுக்கு போய் நீ ஏன் கவலபடுற. இப்ப நம்மள இந்த துணீல எலக்காரமா பார்க்குரவுங்க. நாளைக்கு பெரும் புகழ் கடச்ச உடனே, இதே துணிய எளிமைனு தூக்கிவச்சு பேசுவாங்கம்மா
                                அப்பிடி அவரு என்ன ஏன் திட்டுனாரு
            அவுங்கள போல முகத்திரைய போட்டுக்கிட்டு, நமக்கான அடையாளத்த தூக்கிப் போட்டுட்டு, சாயத்த பூசிக்கிட்டு, போலி கௌரவத்த தலைல தூக்கி வச்சு ஆடாம இப்பிடி நீ நீயாவே வந்திருக்கியேனு கேட்டாரு
                                      


No comments:

Post a Comment