Friday 30 October 2015

நானே நான்

                நான் பால்கனியில் நின்றுக்கொண்டு, என் காஃபி கோப்பையில் மீதமிருந்த கடைசி சொட்டை பார்த்துக்கொண்டிருந்தேன். யாரோ பின்னாளிருந்து என், தோளை தட்டுவது போலிருந்தது.
         ‘அது எப்படி? நான் மட்டும் தான் வீட்டிலிருக்கிறேன். பின்பு யார் என் தோளை தட்டுவது?’
          திரும்பி பார்த்தேன். ஒரு முதியவர். அறுபது வயதிற்கு மேலிருக்கும். தலை கொஞ்சம் நறைத்திருந்தது. இடது கன்னத்தில் எனக்கு இருப்பது போல்  மச்சம். தலையில் எனக்கு இருப்பது போல் தழும்பு. நானே தான். நான் அறுபது வயதில், எப்படி இருப்பேனோ அப்படியே இருந்தார். என்னை அவர் பக்கமாக இழுத்தார். நான் அவரை தள்ளிவிட்டு ஓடினேன்.
         அப்போது, யாரோ வாக்கிங் ஸ்டிக்கால், என்னை தடுப்பது போலிருந்தது. ஒரு கிழவர் என்னை சிரித்தபடி, வாக்கிங் ஸ்டிக்கால் என்னை அடித்தார். உடல் மெலிந்து, தோள் சுருங்கி, கன்னங்களில் குழி விழுந்து. பார்ப்பதற்கே பரிதாபகரமாக இருந்தார். நிற்க முடியாமல், சுவரி சாய்ந்த படி, தரையில் உட்கார்ந்தார்.
        “என்ன பாக்குற? நான் தான். நீ. அடையாளம் தெர்லயா? அவன தள்ளிவிட்டா நான் விட்ருவேனா?”
        அவரை பார்க்க பயந்து, நடு ஹாலுக்கு ஒடிவிட்டேன். அங்கு ஒரே அழு குரலாக இருந்தது. மாலைகள் போடப்பட்ட, ஒரு கண்ணாடிப் பெட்டியை சுற்றி பலர் அமர்ந்திருந்தனர். அருகில் சென்று, கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்தேன். அந்த வாக்கிங் ஸ்கிட் கிழவர், தான் சவமாக கிடந்தார். எனக்கு தலை சுற்றியது. என் அறைக்கு சென்று கதவை பூட்டினேன். சுவற்றில் என் புகைப்படத்திற்கு மாலை போடப்பட்டிருந்தது. மாலையை பிய்த்து எறிய, படத்திற்கு அருகில் சென்றேன். படத்திலிருந்து வெளியே வந்த ஒரு கை, என்னை படத்திற்குள் இழுத்துக்கொண்டது.

No comments:

Post a Comment